
மனதோடு மனது
கலக்கின்ற பொழுது
மயக்கங்கள் தருகின்றது.
இதயத்தின் வலிகள்
உன் இதழ் பொழியும் அன்பில்
இதமாகத் தணிகின்றது.
உனை மார்போடு தழுவத் துடிக்கின்ற கரங்கள் -
நாணத்தை விடுத்து புதுத்தேடல் கொள்ளும்
கண் பேசும் பரிபாஷை முடிகின்ற இரவில் -
கண் தவிர மற்றவை தான் விளையாடிடும்.

காமத்தின் முடிவில்
என் நெஞ்சோடு நீ உறங்கும்
தருணங்கள் சுகமானது.
மோட்சத்தின் வாசல்
சேர்கின்ற பொழுது
நம் கண்கள் மழை பொழியுது !!
No comments:
Post a Comment