எங்கோ இருக்கிறாள்
என்னையே நினைக்கிறாள்
எதையும் வெறிக்கிறாள்
எப்பொழுதும் தித்திக்கிறாள்!
தவிப்போடும் தகிப்போடும்
தலையனையை முட்டுகிறாள்
முனைப்போடும் முறைப்போடும்
முனுமுனுத்துச் சீண்டுகிறாள்!
கன்னத்தில் கைவைத்து
கண்ணிரண்டில் நீர்பூத்து
கண்ணாளன் என்னைத்தான்
கனவோடு காதல் செய்கிறாள்!
மழைநேர மண்வாசம்
பூஞ்செடியின் பூவாசம்
புத்தம்புது தாள்வாசம்
என்றென்னை எண்ணுகிறாள்!
என்காதல் சிறைவாசம்
முழுநேர தாய்ப்பாசம்
என்னோடு கொண்டிடவே
எனக்காக காத்திருக்கிறாள்!
என்னவள்,
இக்கணமும் இனிக்கிறாள்!!
2 comments:
Awesome:))
Thanks for visiting :)
Post a Comment