குட்டி குட்டி கண்கள் கொண்டு
திறந்து மூடி நெஞ்சைக் கொய்து
பூத்திராத சின்ன மொட்டு
இதழில் நீரைக் கொஞ்சம் வைத்து
உறங்கும் போதும் உலவும் போதும்
விருந்து வைக்கிறாய்.
பதறி விரைந்து சமைக்கும் நேரம் - உன்
கலைந்த ஓரக் கூந்தல் ஈரம் - என்
இதயத் துடிப்பை நிறுத்திச் செல்லும்.
நீ அமைதியாக உறங்கும் நேரம்
அதிகாலை சற்றே விழித்த நேரம்
உன் ஈரக் கூந்தல் உலரும் நேரம்
கொஞ்சிப் பேசி கெஞ்சும் போதும்
மழலை சிரிப்பில் மயக்கும் போதும்
அக்கு வேராய் ஆணி வேராய்
என்னைக் கொல்கிறாய்!!