Sunday, January 20, 2013

பூங்கொத்து





இனிய உறவே
புதிய வரவே 
உனைக் காணவே
கண்கள் பனிக்குதிங்கே 


காத்திராமல் தாழ்திறந்து
பூத்திராயோ பூந்தளிரே 


என் சுண்டு விரலின் நுணியை
உன் பிஞ்சுக் கையுள் பற்றி 
புன்னகைப்பாயோ உறக்கத்தில்

என் மூச்சுக் காற்றின் வெப்பத்தில்
சஹானா ராகத்தில் அழுதிடாயோ
உனது தேன் குரலில்


உன் நித்திரையை நித்தம் கண்டு
ரசித்திடுவேன் பக்கம் வந்து
நீ மிதித்தாலும் இன்னும் கொஞ்சம்
என் நெஞ்சம் தான் உந்தன் தஞ்சம் 


மயிலுக்குத் தோகை சுமையா 
கடலுக்கு மீன்கள் சுமையா 
பூவுக்குத் தேன் தான் சுமையா 
பாட்டுக்கு இசை தான் சுமையா 


இனிமேல் என் எஞ்சிய காலம் 
நிச்சயம் உன் வசந்த காலம் 
சுகமான சுமைகள் தருவாய் 
பரிவோடு பாசம் தருவேன் 
எப்பொழுதும் சேட்டை புரிவாய் 
எண்ணோடு எழுத்தும் தருவேன் 
உன்னுடைய கனவுகள் வாழ 
என்னுடைய உயிரும் தருவேன்.