பூவிதழ்
பார்வையில்
மந்திர
மொழியில்
ரீங்கார
அழுகையில்
பனிக்கும்
புன்னகையில்
நீ வெல்கிறாய்
நான்
உறைகிறேன்
நாளும் தவழும்
பொழுதிலும்
தத்தி
நடக்கும் பொழுதிலும்
எனைத் தழுவும்
பொழுதிலும்
மார்பில்
உறங்கும் பொழுதிலும்
நீ உணர
வைக்கிறாய்
நான் உலராமல்
வாழ்கிறேன்
நீ பூத்த
நன்னாளாம்
என் திமிருடைந்தத்
திருநாளே
நமது ஒவ்வொரு
நொடியிலும்
வழிநடத்தி நீ
முன் செல்கிறாய்
அமைதியாய் உன்
பின் செல்கிறேன்
நீ வேறுலகம்
காட்டுகிறாய்
நானதில்
ரசித்து சுவாசிக்கிறேன்