Sunday, May 3, 2015

ரசித்து சுவாசிக்கிறேன்


பூவிதழ் பார்வையில்
மந்திர மொழியில்
ரீங்கார அழுகையில்
பனிக்கும் புன்னகையில்
நீ வெல்கிறாய்
நான் உறைகிறேன்

நாளும் தவழும் பொழுதிலும்
தத்தி நடக்கும் பொழுதிலும்
எனைத் தழுவும் பொழுதிலும்
மார்பில் உறங்கும் பொழுதிலும்
நீ உணர வைக்கிறாய்
நான் உலராமல் வாழ்கிறேன்



நீ பூத்த நன்னாளாம்
என் திமிருடைந்தத் திருநாளே
நமது ஒவ்வொரு நொடியிலும்
வழிநடத்தி நீ முன் செல்கிறாய்
அமைதியாய் உன் பின் செல்கிறேன்
நீ வேறுலகம் காட்டுகிறாய்
நானதில் ரசித்து சுவாசிக்கிறேன்