இனிய உறவே
புதிய வரவே
உனைக் காணவே
கண்கள் பனிக்குதிங்கே
காத்திராமல் தாழ்திறந்து
பூத்திராயோ பூந்தளிரே
என் சுண்டு விரலின் நுணியை
உன் பிஞ்சுக் கையுள் பற்றி
புன்னகைப்பாயோ உறக்கத்தில்
என் மூச்சுக் காற்றின் வெப்பத்தில்
சஹானா ராகத்தில் அழுதிடாயோ
உனது தேன் குரலில்
உன் நித்திரையை நித்தம் கண்டு
ரசித்திடுவேன் பக்கம் வந்து
ரசித்திடுவேன் பக்கம் வந்து
நீ மிதித்தாலும் இன்னும் கொஞ்சம்
என் நெஞ்சம் தான் உந்தன் தஞ்சம்
மயிலுக்குத் தோகை சுமையா
கடலுக்கு மீன்கள் சுமையா
பூவுக்குத் தேன் தான் சுமையா
பாட்டுக்கு இசை தான் சுமையா
இனிமேல் என் எஞ்சிய காலம்
நிச்சயம் உன் வசந்த காலம்
சுகமான சுமைகள் தருவாய்
பரிவோடு பாசம் தருவேன்
எப்பொழுதும் சேட்டை புரிவாய்
எண்ணோடு எழுத்தும் தருவேன்
உன்னுடைய கனவுகள் வாழ
என்னுடைய உயிரும் தருவேன்.