Friday, May 1, 2009

நெஞ்சமெல்லாம்..


வற்றாத வார்த்தை இருந்தும் பற்றாதே என் சுவட்டில்


கல்லாத பாடம் ஒன்று நெஞ்சோடு மனக்கூட்டில்


எவ்வாறு நானும் முயல உன்னை புரிய வைக்க


காட்டாற்று வெள்ளத்தில் உயிர் சிக்கி பரிதவிக்க


துடிக்கும் இதயம் மறந்தேன் - திமிரிழன்தேன்.



இதயம் இரண்டும் மொழியும் பொழுது உயிர்கள் கலக்கும்


இதை வார்த்தையால் பரிமாற நினைக்க தேகம் வெடிக்கும்



உயிரோவியம் என் மனதுக்குள்ளே பலகாவியம் படைக்கும்


வெறும் கூற்றினால் வெளியில் சொன்னால் புனிதம் கெடுக்கும்


வழி காட்டி நீ வலி தருகிறாய்


புள்ளி கோலமாய் இணைகிறாய்!!

No comments: