Thursday, May 14, 2009
பேரின்பம்
சிந்திடும் வியர்வைத் துளி - உனக்கு
நம்பிக்கை வளர்த்திடும் பள்ளி - வாழ்க்கை
உழைக்க உழைக்க கொள்ளை அழகடா!
இதை எண்ணிய வேளையில் நீயும்
கதை கட்டிடும் வேலையை விட்டு
சதை தேய்ந்திட மேம்பட உழைப்பாயடா!
தூற்றுவோர் தூற்றலில் என்றும்
சாக்கடை நாற்றமே மிஞ்சும்
இதை கருத்திலே என்றுமே எண்ணிக் கொள்ளடா!
உழைப்பிலே கண்ணியம் கொண்டு
காதலாய் தொழிலையும் கண்டு
வாழ்ந்திடும் வாழ்க்கையில் உண்டு பேரின்பமடா!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment