Thursday, May 7, 2009

குருநிலை


இயற்கை இவ்வுலகில் சொல்லும் விஷயங்கள்
நாளும் நம்வாழ்வில் கற்கும் பாடங்கள்
வாழ்கை மலர்மஞ்சம் மூடன் பக்கத்தில்
நாளும் புதுஅனுபவம் ஏகன் பக்கத்தில்



கல்லுக்குள் மறைந்திருக்கும் சிற்பங்கள் யாவும்
வலி தாங்கி உருமாறி புகழ்மாலை சூடும்
கொதிக்கின்ற ரத்தத்தின் வெப்பத்தில் விதியும்
எதிர்நோக்கி அடிவைக்க நம்பக்கம் வளையும்
அடிவாங்கி வலிதாங்கும் உலகின்பொருள் யாவும்
மின்னாமல் வெல்லாமல் கனவிலும் நிகழ்ந்திடுமோ?

வீரத்திருமகனே!
நீ தோல்விக்கு அஞ்சாமல்
உன் வேள்வியை முடிக்காதே
நீ வேதனை தாங்காமல்
இங்கு சாதனை கிடையாதே!!

No comments: