Monday, August 18, 2008

கவிதையே..



என்னை விலகி விடு


மனதால் ஒதுக்கி விடு


ஒழுங்காய் ஒழித்து விடு


கனவை கலைத்து விடு - என்


நினைவை பழித்து விடு



உன்னால் கொண்டது போதும்


உறவால் கண்டது போதும்


வலியால் வெந்தது போதும்


விதியால் நொந்தது போதும் - உன்


சுவாசத்தால் செத்தது போதும்



என்னை வாழ விடு


வாழ்வில் வளர விடு


சற்றே உலவ விடு


முழுதாய் உணர விடு - எனைக்


கொஞ்சம் கரைய விடு



உந்தன் உறவு போதும்


உணர்வின் உரிமை போதும்


கண்ணின் மயக்கம் போதும்


காமத்தின் மோகம் போதும்


உயிரின் தாகம் போதும் - காதல் கவிதையே



என் காதலும் இனி மெல்லச்சாகும்!

No comments: