Monday, August 18, 2008

வரம்


தொலைந்த பொழுதுகள் வேண்டும் - உன்

கண்ணை மறந்து நம்

காதல் தொலைத்த கள்ள நிமிடங்கள் கட்டாயம் வேண்டும்



சிதறிய ஸ்பரிசங்கள் வேண்டும் - என்

சலனத்தால் சரிந்த நம்

காதல் விருட்சம் வேரோடு மீண்டும் செழிக்க வேண்டும்



இனிய இரவுகள் வேண்டும் - உனைமட்டும்

நினைந்த நீண்ட நினைவுகள்

நீங்காமல் என் நெஞ்சோடு என்றென்றும் வேண்டும்



புரிந்தும் புரியாமல் அறிந்தும் அறியாமல்

நான் செய்த பாவங்கள் யாவும்

புள்ளியாய் உன் காலோடு கரைய வேண்டும்



காலத்தின் அவசரத்தால் தவறவிட்ட நிதானத்தால்

நான் செய்த துரோகங்கள் யாவும்

உன் தாய்மையால் துடைத்தெறிய வேண்டும்



நீ தான் அவளென்று ஏமாந்த என் நெஞ்சிற்கு

பரிசாக அவள் தந்த வற்றாத காயத்திற்கு

மருந்தாக முழுநேரம் உன் மடிசாய வேண்டும்



என் காதல் நேர்மை உணர்த்த

நம் ஆயுள் நீள வேண்டும் - உனை

என் அன்பால் ஆள வேண்டும்



என் காதல் மீண்டும் என்றும் வேண்டும்

நான் முழுதாய் மீண்டு வர வேண்டும்

மீட்க நீ வேண்டும்!!

No comments: