Tuesday, August 12, 2008

காதல் துரோகம்


நித்தம் சத்தியம் செய்தேன்


எண்ணிய கருமம் எண்ணாதிருக்க


காதல் துரோகம் செய்தல் பாவம்


உள்ளம் நன்காய் உணர்ந்திருந்தும்


நோதல் ஒன்றே தொழிலாய் கொண்டு


மீண்டும் மீண்டும் வயதின் வேகம்


பகல் பொழுது போதி மரம்


இரவின் நொடிகள் தோல்வி முகம்


கிரகம் நேரம் கொடுக்கும் கிரக்கம்


சறுக்கம் நேர்த்தும் நிஜமாய் வாழ்வில்


யாகம் வேண்டும் மோகம் போக


ஆக்கம் செய்வேன் சத்தியமாக


நித்தம் சத்தியம் செய்தேன்


எண்ணிய கருமம் எண்ணாதிருக்க..

No comments: